கோவையில் அனுமதியற்ற 185 விளம்பர பலகைகள் அகற்றம்!

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 185 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக, சமீபத்தில் கருமத்தம்பட்டியில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக நில உரிமையாளர், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல்.



கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 185 அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உள்ளாட்சி அமைப்பு, காவல்துறையினர் இணைந்து அகற்ற தனிக்குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், தெக்கலூர் அடுத்த நீலாம்பூர் சாலையில் உள்ள அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற காவல்துறையினர் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனிடையே கருமத்தம்பட்டி அருகே இரும்பு கம்பம் சரிந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீதும், நில உரிமையாளர் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைக்கும் பட்சத்தில் நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தினர் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...