மதிமுகவில் இருந்து விலகினார் துரைசாமி!

மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுங்கள் என வைகோவுக்கு கடிதம் எழுதிய மதிமுக அவைத்தலைவர் துரைசாமி, இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும், திமுகவுக்கு தனது ஆதரவு என்றும், தான் எந்த கட்சியிலும் இணைய போவதில்லை எனவும் கூறியுள்ளார்.


திருப்பூர்: மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக மதிமுகவின் அவைத்தலைவர் துரைசாமி அறிவித்துள்ளார்.

வரும் ஜூன் மாதம் மதிமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அண்மை காலமாக துரை வைகோவின் வருகைக்குப் பிறகு அதிருப்தியில் இருந்த மதிமுக அவைத்தலைவர் துரைசாமி கடந்த மாதம் மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடுங்கள் என வைகோவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுகவின் அவைத் தலைவர் துரைசாமி பேசியதாவது, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.

திமுகவுக்கு எனது ஆதரவை மட்டும் அளிக்கிறேன். எந்த கட்சியிலும் இணைய போவதில்லை. எனது தொழிற்சங்கத்தை தொடர்ந்து நடத்த இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...