ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட பவர் பஃப் கேர்ல்ஸ் 2017 நிகழ்ச்சியில் பெண்கள் புல்லட் மற்றும் ஜீப்புகளில் ஊர்வளம் சென்றனர்

கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் பவர் பஃப் கேர்ல்ஸ் 2017 என்ற நிகழ்ச்சியை மார்ச் 3 (இன்று) மற்றும் 4 நடத்தி வருகிறது. இது மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நிகழ்த்தப்பட்டது. 



ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் புல்லட் ஓட்டுதல், ஜீப் ஓட்டுதல், மாட்டு வண்டி ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனர். 



இன்று காலை 7 மணியளவில் 20 மாணவிகள் புல்லட் ஓட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் தண்ணீரை சேமிப்பது, விவசாயிகளை காப்பது மற்றும் பாரம்பரிய கால்நடைகளை காப்பது ஆகியவை ஆகும். அவர்கள் மொத்தமாக 300 கிலோ மீட்டர் தூரம் பொள்ளாச்சி, பழனி ஆகிய ஊர்களின் வழியாக பயணம் செய்தார்கள்.



ஹலோ எப்எம்-யில் அறிவிப்பாளர்களாக பணியாற்றும் மகா மற்றும ரஞ்சிதா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் அறிவிப்பாளர்களாக செயல்பட்டனர். இதேப் கருத்தினை முன்னிட்டு மாணவிகள் ஜீப் மற்றும் மாட்டு வண்டி ஓட்டும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர்.



ஜீப் ஓட்டும் பந்தயமானது வஉசி மைதாகத்தில் இருந்து துவங்கி கோவை நகர் முழுவதும் பயணித்து கல்லூரியை அடைந்தது. சின்னியம்பாளையம் கிராமத்தில் துவங்கிய மாட்டுவண்டி பந்தையம் கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது. 



இந்நிகழ்ச்சியில், பீரிமியர் ஸ்பின்னிங் அன்டு வீவீங் நிறுவனத்தின் இயக்குநர் சுவாதி ரோகித் கலந்துகொண்டு மாணவிகளிடையே பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து உரையாற்றினார்.



தொடர்ந்து நாளை (மார்ச் 4) வாட்டர் வாலிபால் போட்டி மற்றும் நேச்சுரல்ஸ் முதன்மை செயல் அதிகாரியின் சிறப்புரை உள்ளிட்டவை நடைபெறவுள்ளது.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...