மாற்று சான்றிதழ் வழங்காத கல்லூரி நிர்வாகம் - திருப்பூர் ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மாணவி கோரிக்கை மனு!

காரமடையில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் அருந்ததியர் இன மாணவிக்கு இலவச கல்வி என கூறிவிட்டு கல்வி கட்டணம் கட்டச் சொன்னதால், பாதியில் நின்ற மங்கலம் பகுதியை சேர்ந்த அருந்ததியர் இன மாணவி சங்கீதா, மாற்றுச்சான்றிதழை கல்லூரி நிர்வாகம் வழங்க மறுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



திருப்பூர்: மாற்று சான்றிதழ் வழங்காத கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனு அளித்துள்ளார். 



திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவரான இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு திருப்பூர் மங்கலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிப்பை முடித்துள்ளார். 

இதையடுத்து காரமடையில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் 2022 - 23ஆம் ஆண்டில் இசிஇ படிப்பில் சேர விண்ணப்பித்த நிலையில், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுகத்திற்கு இலவச கல்வி படிப்பு என்று கல்வி நிர்வாகம் கூறியதை நம்பி இசிஇ பாடப் பிரிவில் சேர்ந்து 40 நாட்கள் கல்வி கற்பித்த நிலையில் கல்லூரி நிர்வாகமானது கல்வி கட்டணத்தை கட்ட வேண்டுமென்று கூறியதாக தெரிகிறது. 

அருந்ததியர் இன மாணவிகளுக்கு இலவச கல்வி என்று கூறியதாலேயே கல்லூரியில் சேர்ந்ததாகவும் தற்போது கட்டணம் கட்ட கூறி வற்புறுத்தியதால் கல்லூரியில் இருந்து நின்றுவிட்ட நிலையில், கல்லூரி நிர்வாகம் மாற்று சான்றிதழ் வழங்க மருத்து வருவதாக கூறப்படுகிறது. 

மேலும், மாற்றுத் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் கல்லூரியில் படித்த 40 நாட்களுக்கான கட்டணத்தை கட்ட வேண்டும் என்று கூறி தன்னையும் தனது குடும்பத்தாரையும் கல்லூரி நிர்வாகம் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாகவும், மாற்று சான்றிதழ் கொடுக்காததால் வேறு கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவி தெரிவித்துள்ளார். 



எனவே, மாவட்ட நிர்வாகம் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதோடு தனது மாற்று சான்றிதழை வழங்க வேண்டும் எனக் கூறி பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தனது குடும்பத்தாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...