கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து திருடிய நபர் கைது - போலீசார் விசாரணை!

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் காணிக்கைகளை திருடிச்சென்ற நிலையில், புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த பணம் மற்றும் இரும்பு கம்பி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை பெரிய கடை வீதியில் கோவையின் காவல் தெய்வமான பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் கோவில் வளாகத்தினுள் நுழைந்து மேற்கு பக்கம் அமைந்துள்ள ஆதி கோனியம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த உண்டியலில் இருந்த பணம் மற்றும் காணிக்கைகளை திருடிச் சென்றார். 

இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி ஆய்வாளர் சிவன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கோவில் உண்டியலை உடைத்து கைவரிசை காட்டிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேகர் (எ) சதீஷ் (32), என்பவரை போலீசார் கைது செய்தனர். 

இதனையடுத்து, அவரிடமிருந்த பணம் மற்றும் திருட பயண்படுத்திய இரும்பு கம்பியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சதீஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...