ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் புற்றுநோய் வரும் என்பது முட்டாள் தனம் என புதிய தமிழகம் கிருஷ்ணாசாமி பேட்டி

விவசாயத்துக்கு மட்டும் நிலம் கிடையாது எனவும், ஹைட்ரோ கார்பன் எடுக்க பைப் நடுவதன் மூலம் புற்றுநோய் வரும் என்பது முட்டாள் தனம் எனவும் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் எரிவாயு உள்ளிட்டவைகளை சொந்த நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையை புதிய தமிழகம் கட்சி ஏற்று கொள்கிறது என கூறினார்.

மேலும், ஹைட்ரோ கார்பன் எடுக்க குழாய்கள் நடுவதன் மூலமாக புற்றுநோய் வரும் என்பது முட்டாள் தனம் எனவும், அப்படி வந்தால் பெட்ரோல், டீசல் எடுக்கும் அரேபிய நாடுகளில் உள்ளவர்கள் எல்லோரும் செத்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தற்போது போராட்டம் நடத்துபவர்களின் கோரிக்கையே சரியல்ல என கூறிய அவர், விவசாயத்துக்கானது மட்டும் நிலம் கிடையாது எனவும், இந்தியாவில் எங்கும் பெட்ரோல் டீசல் எடுக்க கூடாது என்றால் எங்கு சென்று வாங்குவது எனவும் கேள்வி எழுப்பினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்த கூடாது என்றால் வாகனங்களை எப்படி ஓட்டுவது, மேக்கின் இந்தியா திட்டம் என்ன என கூறிய அவர், இருக்கிற இடத்தில் தான் அவற்றை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நீட் தேர்வு குறித்து பேசிய அவர், கடந்த 50 ஆண்டு காலத்தில் பள்ளி கல்வியை மேம்படுத்தாததன் காரணமாகவே தற்போது நீட் தேர்வுக்கு விலக்கு கேட்க வேண்டிய நிலை உள்ளதாக கிருஷ்ண சாமி அப்போது கூறினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...