கோவையில் மளிகை கடை உரிமத்தை புதுப்பிக்க ரூ.7,000 லஞ்சம் - உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கைது!

கோவை வடவள்ளி அடுத்த நவாவூர் பகுதியில் துரைசாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் உரிமத்தை புதுப்பிக்க ரூ.7,000 லஞ்சமாக வாங்கிய மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வெங்கடேஷ் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவையில் மளிகை கடை உரிமத்தை புதுப்பிக்க ரூ.7,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வெங்கடேஷ் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கோவை வடவள்ளி அருகே நவாவூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (78). இவர் அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் லாலிரோட்டில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் வெங்கடேஷ் என்பவர் துரைசாமியின் கடைக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். 

அப்போது கடையின் உரிமம் காலவதியாகி இருந்தது. இதையடுத்து அதை புதுப்பிக்க வேண்டும் என்று துரைசாமியிடம் வெங்கடேஷ் கூறியுள்ளார். மேலும் உரிமத்தை புதுப்பிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. பின்னர் அதை குறைத்து ரூ.15 ஆயிரம் கேட்டதாக தெரிகிறது. ஆனாலும் பெரிய தொகையென துரைசாமி கூறியதால் இறுதியாக ரூ.7 ஆயிரம் கேட்டு உள்ளார். 

இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைசாமி கோவை லஞ்ச6 ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூ.7 ஆயிரம் ரூபாயை துரைசாமியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். அந்த ரூபாய் நோட்டுகளுடன் உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசை துரைசாமி தொடர்புகொண்டு பேசினார். 

அப்போது அவர் வடவள்ளி சாலை பால்கம்பெனி அருகே துரைசாமியை வர அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை துரைசாமி, உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேஷிடம் கொடுத்தார். 

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையிலான போலீசார் வெங்டேசை சுற்றி வளைத்தனர். கையும் களவுமாக பிடிபட்ட வெங்கடேசை லாலிரோட்டில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...