பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த காவலரின் குழந்தைகள் - கோவை காவல் ஆணையர் நேரில் பாராட்டு

கோவையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த காவல்துறையினரின் குழந்தைகளை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்து, புத்தகங்களை பரிசளித்தார்.

கோவை: கோவையில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டி பரிசளித்தார்.

அண்மையில் வெளியான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் குழந்தைகளை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், உதவி ஆணையர் அருள்முருகன் மற்றும் பெண் தலைமை காவலர் ஆகியோரின் குழந்தைகளை நேரில் சந்தித்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்து புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...