வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் - கோவை மாநகராட்சி துணை ஆணையருக்கு பதவி உயர்வு!

கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சென்னை வெளிவட்ட சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட வருவாய் அலுவலராக மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை: கோவை உட்பட 25 மாவட்டங்களில் உள்ள வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் வருவாய் அலுவலர்கள் 25 பேர் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.



கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த பி.எஸ்.லீலா அலெக்ஸ், சென்னை வெளிவட்ட சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக்கு கோவை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா பதவி உயர்வு அளிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அதேபோல் பெருநகர சென்னை நகராட்சி மண்டல அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், கோவை மாவட்ட தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) முதுநிலை மண்டல மேலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...