கோவையில் 10 நாளாக தலையில் பிளாஸ்டிக் டப்பாவோடு சுற்றிய நாய்.. தன்னார்வ அமைப்பு செய்த பேரூதவி!

கோவை பீளமேடு அடுத்துள்ள சேரன் மாநகர் பகுதியில் உள்ள குமுதம் நகரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலையில் பிளாஸ்டிக் டப்பாவுடன் சுற்றித்திரிந்த நாய், விலங்குகள் நல தன்னார்வ அமைப்பின் உதவியோடு இன்று மீட்கப்பட்டுள்ளது. நாயின் தலையில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் டப்பாவும் அகற்றப்பட்டது.


கோவை: பீளமேடு அருகே பிளாஸ்டிக் டப்பாவுடன் சுற்றி திரிந்த நாய் 10 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

கோவை பீளமேடு அடுத்துள்ள சேரன் மாநகர் பகுதியில் உள்ள குமுதம் நகரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலையில் பிளாஸ்டிக் டப்பாவுடன் நாயின் கழுத்தில் மாட்டிக் கொண்டது.



இதனால் அந்த நாய் உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் அவதிப்பட்டு வந்தது. நாயை மீட்பதற்காக இப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர்.

ஆனால் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் இன்று காலை The Planetic Foundation என்ற தன்னார்வ விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் அங்கு வந்தனர்.

அப்போது குமுதம் நகர் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சோர்வாக நாய் படுத்திருந்தது.



குடியிருப்பு வாசிகளின் உதவியோடு, லாவகமாக நாயை பிடித்த குழுவினர், அதன் தலையில் மாட்டி இருந்த பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து நாயை காப்பாற்றினர்.



இலவசமாக இந்த சேவையை செய்து வரும் தன்னார்வ அமைப்புக்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியோடு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.



பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அலட்சியமாக தூக்கி எறிவதன் விளைவு தான் இது என கூறிய தன்னார்வலர்கள், பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் குடியிருப்பு வாசிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...