திருப்பூர் அருகே அனுமதியின்றி இரும்பு உருக்காலை கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் - போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

திருப்பூர் அருகேயுள்ள மும்மூர்த்தி நகர் பகுதியில் இரும்பு உருக்காலை கழிவுகளை கொட்டுவதற்காக ஏற்றி வந்த பதிவெண் சரியாக இல்லாத லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அனுமதியின்றி இரும்பு உருக்காலை கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே அனுமதியின்றி இரும்பு உருக்காலை கழிவுகளை ஏற்றிவந்த லாரியை போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் பெருமாநல்லூர் சாலை மும்மூர்த்தி நகர் பகுதியில் வாகன எண் சரியாக தெரியாத நிலையில் வந்த சரக்கு வாகனத்தில் மர்ம பொருள் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் சிலர் அதனை சிறை பிடித்து போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் வாகன எண் முறையாக இல்லாததால் வாகனத்திற்கு அபராதம் விதித்தனர். வாகனத்தில் கழிவு பொருட்கள் இருந்ததால் உடனடியாக சந்தேகத்தின் பேரில் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது.



சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆய்வு செய்ததில் வாகனத்தில் இரும்பு உருக்காலையில் இருந்து வெளி வந்த கழிவுகள் வைத்திருந்தது தெரியவந்தது.



அந்த கழிவுகளை மும்மூர்த்தி நகர் பகுதியில் இருந்த பாறைக்குழியில் கொட்ட எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஈரோடு சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து கழிவுகள் கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது.



ஆனால் அதற்கான எந்த ஒரு முறையான ஆவணங்களும் இல்லாமல் கழிவுகளை கொண்டு வந்தது தெரிய வந்ததையடுத்து லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் வட்டாட்சியரின் புகாரின் பேரில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கழிவு கொண்டு வந்த லாரியின் ஓட்டுநர் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...