கோவை ராஜ வீதியில் கத்தி முனையில் 4.5 கிலோ தங்கம் கொள்ளை.


கோவை ராஜ வீதியில் உள்ள நகைக்கல் கடையில் புகுந்த நபர்கள் கத்தி முனையில் 4.5 கிலோ தங்க நகைகளை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் ராஜ வீதி பகுதியில் தங்க நகை மொத்த வியாபரம் செய்து வருகிறார்.



சந்திரசேகரின் கடையில் ஒட்டுநர் ரியாசுதின் உள்ளிட்ட 4 பேர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இன்று மாலை சந்திரசேகர் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் ரியாசுதீன் மற்றும் முகமூடி அணிந்த இரு மர்ம நபர்கள் கடைக்குள் நுழைந்தனர். அப்போது, ஊழியர்கள் கீதா, ரேவதி என்ற இரு பெண்கள் பணியில் இருந்தனர்.

தொடர்ந்து, ரியாசுதின் மற்றும் முகமூடி அணிந்து வந்த இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி பெண்களை மிரட்டியதோடு கண்களை மூட கூறினர். பின்னர், கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 4.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் மதிப்பு ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் இருக்குமெனவும் கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து, கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து, பணியில் இருந்த பெண்கள்  சந்திரசேகருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, அவர் அளித்த புகாரின் பேரில், வெரைட்டி ஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராஜவீதி முக்கிய பகுதி என்பதால் அங்கு பல இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்பு காமிராக்களை அமைத்துள்ளனர். அதோடு, கொள்ளை நடந்த இடத்தின் அருகில் தனியார் வைத்திருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் கொண்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பட்டப்பகலில் கோவையில் மையப்பகுதியில் நடந்த இந்த துணிகரக்கொள்ளை அப்பகுதியில் நகைக்கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...