கிணத்துக்கடவு அருகே தடுப்பணையில் மூழ்கிய கல்லூரி மாணவன் உடல் மீட்பு!

கோவை கிணத்துக்கடவு அருகேயுள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்த தஞ்சை ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற கல்லூரி மாணவர் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவரது உடல் பத்திரமாக மீட்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே தனியார் கல்லூரி மாணவர் நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மகன் கார்த்திகேயன் (22). இவர் கிணத்துக்கடவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் படித்து வந்தார். அதே கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது கல்லூரி விடுதியில் இருந்து முடி வெட்டுவதற்காக கிணத்துக்கடவிற்கு சென்றபோது அவரது கல்லூரி நண்பர்கள் ஜீவானந்தம், மாதவன், ஹரி,இளங்கோ உள்ளிட்ட 8 பேருடன் கிணத்துக்கடவு அடுத்துள்ள வடபுதூரில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றதாக தெரிகிறது.

தடுப்பணையில் அனைவரும் குளித்துவிட்டு திரும்பும்போது கார்த்திகேயன் மட்டும் காணாமல் போனது தெரிய வந்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினர் வந்து தடுப்பனையில் கார்த்திகேயன் உடலை தேடினர்.

நீண்ட நேரத்திற்கு பிறகு தடுப்பணை தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இறந்து போன கல்லூரி மாணவன் உடலில் காயம் இருந்ததால் மாணவன் கார்த்திகேயனின் தந்தை திருப்பதி தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனுடன் குளிக்க சென்ற மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...