கோவையில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு - பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியீடு!

கோவையில் சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த செயின் பறிப்பு சம்பவம் நடந்தது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை இராமநாதபுரம், ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரோஜவிபி.

அவர் அதே பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றுவிட்டு, மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது, பின்னால் வந்த இரண்டு நபர்கள் திடீரென சரோஜாவிபி கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

சுதாரித்துகொண்ட சரோஜாவிபி, தனது தங்க சங்கிலியை இருக்கமாக பிடித்துக்கொண்டு கூச்சலிட்ட நிலையில், சங்கிலி அறுந்து பாதி கொள்ளையர்களின் கையில் கிடைத்ததால் அங்கிருந்து கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

இதனால் செய்வதவறியாது தவித்த சரோஜாவிபி, தனது கையில் இருந்த பாதி தங்க சங்கிலியுடன் கோவை இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டதோடு, அந்த இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...