ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவை சந்தித்த சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி!

ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதி மற்றும் படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆகியோரை சி.எஸ்.கே கேப்டன் தோனி சென்னையில் இன்று சந்தித்து பாராட்டு தெரிவித்து அவர்கள் பெயர் அச்சிடப்பட்ட ஜெர்சியையும் பரிசளித்தார்.



சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினரை சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் வசித்து வரும் பொம்மன் - பெள்ளி தம்பதி, யானைகள் பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தாயை பிரிந்த ரகு, பொம்மி என்ற 2 குட்டி யானைகளை பராமரித்து தங்களின் குழந்தைகள் போல் வளர்த்து வந்தனர்.

இந்த குட்டி யானைகளை பொம்மன் - பெள்ளி தம்பதி எவ்வாறு பராமரித்து வந்தனர் என்பதை மையமாக கொண்டு தி எலிபன்ட் விஸ்பரரஸ் என்ற பெயரில் ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இந்த ஆவண படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கி இருந்தார். குனீத் மோங்கா தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் மிகவும் நேர்த்தியாக காட்டப்பட்டிருந்த பொம்மன்-பெள்ளி தம்பதிக்கும், யானை குட்டிகளுக்கும் இடையேயான உறவு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த ஆவணப்படம் சமீபத்தில் நடந்த 95வது ஆஸ்கர் விழாவில் விருதையும் வென்றது. இதன்மூலம் பொம்மன்-பெள்ளி தம்பதி உலகம் முழுவதும் புகழ் பெற்றனர்.



இந்நிலையில், இன்று ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி மற்றும் பொம்மன் - பெள்ளி தம்பதி ஆகியோர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ்.தோனியை சந்தித்தனர். அப்போது அவர்களை வெகுவாக பாராட்டிய தோனி, அவர்களுக்கு 7 ஆம் எண் கொண்ட அவரவர் பெயர் அச்சிடப்பட்ட ஜெர்சியை பரிசாக அளித்ததுடன், புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...