மாநகராட்சி இடத்தில் உள்ள சீமை கருவேள மரங்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் உத்தரவு


கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 19-வது வார்டுக்குட்பட்ட வீரகேரளம் பெரிய தோட்டம் காலனி மனைப்பிரிவு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீடு இடத்தை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த இடத்தில் உள்ள சீமைக் கருவேள மரங்களை அகற்றி அறிவிப்பு பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.



இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் வீடு வீடாகச் செல்லும் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்களின் பதிவேடு புத்தகங்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர், தொடர்ந்து மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை பார்வையிட்டார்.



பின், வீரகேரளம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவை நேரில் சென்று மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் பார்வையிட்டார். தொடர்ந்து, வீரகேரளம் ஹவுசிங்யூனிட் பகுதியில் உள்ள குடிநீர் நீத்தேக்கத் தொட்டியைச் சுற்றி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.



இதைத்தொடர்ந்து, வடவள்ளி 17-வது வார்டுக்குட்பட்ட குருசாமி நகர் பகுதியில் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, உதவி ஆணையர் கே.ராமைய்யா, செயற்பொறியாளர் (பொ) சரவணக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...