மல்யுத்த சம்மேளன தலைவர் பதவி விலக கோரி கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிட்ஜ் பூசன் சரன் சிங் மீது குற்றம்சாட்டி வீராங்கனைகள் 17 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பாலியல் குற்றசாட்டுக்கு ஆளாகியுள்ள மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூசன் சரன் சிங் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அதற்கு நீதிகேட்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கடந்த 17 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டத்தை நசுக்க மத்திய அரசு காவல்துறை மூலம் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.



இந்நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளி இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிட்ஜி பூசன் சரண் சிங் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோவை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி கவுன்சில் சார்பில் மத்திய தந்தி அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட கவுன்சில் பொதுச் செயலாளர் தங்கவேல், கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்க செயலாளர் சிவசாமி, தமிழ்நாடு எ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ், கோவை மாவட்ட பொறியியல் பொது தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தி சந்திரன், பிரபா ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...