ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கு கோவையில் விண்ணப்பங்கள் விநியோகம் 6ம் தேதி துவக்கம்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசின் வழிகாட்டுதல்களின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்- 2 முறையே 2017 ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோவை மாவட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலரால் வரும் மார்ச் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர விநியோகம் செய்யப்பட உள்ளது.

இந்த விண்ணப்பங்களை பெற கட்டணமாக ரூ.5 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பங்கள் மட்டுமே விநியோகம் செய்யப்படும்.

இதுகுறித்தான மேலும் தகவலுக்கும் விற்பனை மையங்கள் தொடர்பாக அறிந்துகொள்ளவும், மாவட்ட வாரியான விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் காணலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கோவை மாவட்டத்தில், முதன்மை கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள வின்சென்ட் சாலையில் செயல்பட்டு வரும் நல்லாயன் உயர்நிலைப் பள்ளி மற்றும் பாலக்காடு சாலையில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், மாவட்ட கல்வி அலுவலகத்தில் வரும் 6ம் தேதி முதல் 23ம் தேதிக்குள் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர திரும்பப் பெறப்படும்.

விண்ணப்பங்கள் வாங்கப்பட்ட மாவட்டங்களிலேயே திரும்ப அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...