சிகரெட் பாக்கெட்டுகள் போல மதுபாட்டில்களிலும் எச்சரிக்கை புகைப்படம் வேண்டும் - பாமக கோரிக்கை மனு!

சிகரெட் பாக்கேட்டுகளில் உள்ளது போல மது பாட்டில்களிலும் எச்சரிக்கை புகைப்படம் ஒட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மது பாட்டில்களுடன் வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.


கோவை: மதுபாட்டில்களிலும் எச்சரிக்கை புகைப்படம் ஒட்ட வேண்டும் என கோரி பாமகவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.



இந்நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு மதுக்கடைகளை அதிகரித்துடன் தானியங்கி மதுவிற்பனை இயந்திரம், திருமண மண்டபங்களில் மதுபானங்கள் அருந்த அனுமதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் மக்களுக்கு மது என்னும் விஷத்தை அருந்த ஊக்கப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.



இந்த நிலையில் கோவை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அனு அளிக்கப்பட்டது. கோவை மேற்கு மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தலைமையில், ஏராளமான பாமகவினர் மது பாட்டில்களுடன் வந்து மனுவை அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது புகையிலை மற்றும் சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை புகைப்படம் இடம் பெற வேண்டுமென்று உத்தரவிட்டார். இதன் காரணமாக புகையிலை மற்றும் சிகரெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

அதேபோல் தற்போது தமிழகத்தில் மதுகுடிப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எச்சரிக்கை புகைப்படத்தை அனைத்து மதுபாட்டில்களிலும் இடம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...