கனிமவளக் கொள்ளையை தடுத்திடுக..! ஜல்லி,மணலுடன் மனு அளித்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்

கோவையில் கனிம வளக்கொள்ளையை தடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஜல்லி, மணல் ஆகியவற்றுடன் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு அதிகப்படியான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும், கோவை மாவட்டத்தில் பல்வேறு கல்குவாரிகள் அனுமதியின்றி செயல்படுவதாகவும் கூறி பல்வேறு கட்சியினர், விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பிலும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.



இந்நிலையில், கனிம வளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் தலைமையிலான நிர்வாகிகள், கோவைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.



அப்போது, அவர்கள் ஜல்லி மணல் உள்ளிட்ட கனிமங்களையும் எடுத்து வந்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

மேலும் கனிம வளங்கள் வெட்டி எடுத்து செல்லப்படுவது தொடர்ந்தால், கோவை மக்கள்தான் வருங்காலங்களில் பாதிக்கப்படுவார்கள் எனவும், கனிம வள கொள்ளையால் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு செல்லும் பணம், அரசுக்குக் கிடைத்தால் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வந்துவிடலாம் எனவும், மதுவில் வரும் வருமானத்தைவிட அதிக அளவு வருமானம் கனிம வளத்தில் கிடைக்கிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...