மாசற்ற காற்றை சுவாசிக்க மரம் நடுங்கள்..! - கோவையில் ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்தி விழிப்புணர்வு

கோவையில் மரம் நடும் திட்டத்தை வலியுறுத்தும் வகையில்  வ.உ.சி சேவா அறக்கட்டளை சார்பில் மாதிரி ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்தி நூதன முறையில் விழிப்புணர்வு பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையை சேர்ந்த வ.உ.சி சேவா அறக்கட்டளையினர் ஒரே ஒரு மரம் நடுவோம் நாளைய தலைமுறை காப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் மாதிரி ஆக்சிஜன் சிலிண்டரை அணிந்தவாறு விழிப்புணர்வை தொடங்கியுள்ளனர்.

அடுத்த தலைமுறை மாசற்ற காற்றை சுவாசிப்பதை உறுதி செய்யும் வகையிலும், காற்றை காசு கொடுத்து வாங்கும் சூழ்நிலை உருவாகிவிடக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும் மாதிரி ஆக்ஸிஜன் சிலிண்டரை அணிந்தவாறு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.



அதன்படி, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாதிரி ஆக்ஸிஜன் சிலிண்டரை முதுகில் பொருத்தியவாறு பதாகைகளை ஏந்தி வ.உ.சி. சேவா அறக்கட்டளையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இது குறித்துப் பேசிய அவர்கள்,இனி வரும் நாட்களில் இது போன்ற விழிப்புணர்வை வாரம் தோறும் பல்வேறு இடங்களில் முன்னெடுக்க உள்ளோம்.சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களை வெட்டினால், அதற்கு ஈடாக கூடுதல் மரங்களை வேறு இடங்களில் வளர்க்க வேண்டும். அரசாங்கம் மட்டும் இல்லாமல் பொதுமக்களும் தாமாக முன்வந்து மரங்களை வளர்க்க வேண்டும், என்றனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வ.உ.சி சேவா அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி முத்துவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...