கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் தலையில் கல்லைப் போட்டு ஒருவர் கொலை

கோவை போத்தனூர் அருகே உள்ள மகாலிங்கபுரத்தில் குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் தலையில் கல்லைப்போட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனோஜ்மேனன் என்ற ஓட்டுநரை கைது செய்து போத்தனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை போத்தனூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்மேனன். கார் ஓட்டுநரான இவர் இரவு நேரங்களில் தனது வீட்டின் மாடியில் நண்பர்களுடன் மது அருந்துவது வழக்கம்.

இவர் நேற்று இரவு கட்டிட தொழிலாளியான சித்தேஸ்வரன் என்பவரை அழைத்துக்கொண்டு வந்து வீட்டின் மாடியில் மது அருந்தியுள்ளார். மதுபோதையில் நண்பர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது மனோஜ்மேனன் அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து சித்தேஸ்வரன் தலையில் போட்டத்தில் சித்தேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய மனோஜ்மேனன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் சம்பவத்தை சொல்லி சரணடைத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சித்தேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி நேரில் பார்வையிட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். இந்த கொலை தொடர்பாக போத்தனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...