கோவை குனியமுத்தூரில் தீயணைப்பான் வெடித்து கல்லூரி மாணவனுக்கு கால் முறிவு!

கோவை குனியமுத்தூரில் பழைய இரும்பு கடையிலிருந்த தீயணைப்பான் வெடித்ததில் சாலையில் சென்ற அருண்குமார் என்ற கல்லூரி மாணவனின் கால் முறிந்தது. விபத்து தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: குனியமுத்தூரில் தீயணைப்பான் வெடித்ததில் கல்லூரி மாணவன் கால் முறிந்தது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அருண்குமார் தனது பைக்கில் நண்பர் ஹரிபிரசாத் என்பவருடன் பாலக்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, குனியமுத்தூர் நரசிம்மபுரம் அருகே வந்தபோது அப்பகுதியில் சாலை ஓரத்திலிருந்த பழைய இரும்பு பொருட்கள் கடையிலிருந்து, பயங்கர சத்தத்துடன் தீயணைப்பான் வெடித்து சிதறி சாலையில் பைக்கில் சென்ற அருண்குமார் காலில் அடித்துள்ளது.



இதில் இடது காலில் அருண்குமாருக்கு முறிவு ஏற்பட்டது. மேலும் தவறி விழுந்ததில் ஹரிபிரசாத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. விசாரணையில் குமார் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடைக்கு வந்த நபர் ஒருவர் 3 பழைய தீயணைப்பானை கொடுத்ததாகவும், அதனை சோதனை செய்தபோது ஒரு தீயணைப்பான் வெடித்து சிதறி அருண்குமார் மீது பட்டதும் தெரியவந்தது.



விபத்து தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...