கோவையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டம் - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

கோவை நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் முன்னோடி வங்கியின் சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டம், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை நிர்மலா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கோவை நிர்மலா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் முன்னோடி வங்கியின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் கல்விக் கடன் பெறுதல், வழிகாட்டுதல் குறித்த அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் பாண்டிய ராஜன், முன்னாள் முன்னோடி வங்கி மேலாளர் வணங்காமுடி, நிர்மலா கல்லூரி முதல்வர் ஜி.எஸ்.மேரி பாபிலோ அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், இளைஞர்களை படிப்பில் மட்டுமல்லாது அனைத்து நிலைகளிலும் வெற்றியாளர்களாக திகழச்செய்யும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக நான் முதல்வன்" திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை கல்வி, சிந்தனை, மொழி ஆற்றல் மற்றும் பன்முகத் திறமையினை மேம்படச் செய்வதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.



மேலும், கோவை மாவட்டத்தில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது எனவும் சமூகத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கவேண்டும்? எங்கு படிக்க வேண்டும்? அதற்கான திறமைகள் மேம்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் வாயிலாக வழங்க வேண்டும்.

இந்த பயிற்சி வகுப்பினை தலைமையாசிரியர்கள் சிறப்பாக பயன்படுத்தி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் எனத் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...