தேர் திருவிழாவை முன்னிட்டு களை கட்டியது கோனியம்மன் கோவில்.



நாளை நடக்கவிருக்கும் கோவை புகழ் கோனியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ராஜகோபுரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

 புதிதாய் கட்டப்பட்டுள்ள கோனியம்மன் திருக்கோயில் ராஜகோபுரமானது முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி காண்போரை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. 



இன்று இரவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆன்மீக சிறப்புரை மற்றும் விசேஷ பூஜைகளில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவை மற்றும் சுற்றுப்புற இடங்களில் இருந்து வந்துள்ளனர்.  



 பச்சை பட்டு உடுத்தி, பாரம்பரிய நகைகள் மற்றும் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனுக்கு மேல தாளத்துடன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 



ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் கோனியம்மன் கோவிலில் உள்ள திருவிழா கோடி கம்பத்திற்கு மஞ்சள் கலந்த புனித நீரையுற்றி பக்தி பரவசத்தோடு அம்மனை வழிபட்டுவருகின்றனர். 



கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் காவல் படையினர் நூற்றிற்கும் மேற்பட்டோர் கோவில் மற்றும் தேர் திருவிழா நடக்கவிருக்கும் பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றங்கள் மதியத்திலிருந்து இரவு வரை அறிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...