கோவையில் 1,234 சைபர் கிரைம் புகார்கள் பதிவு - மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தகவல்

கோவை மாவட்டத்தில் நடபாண்டில் மட்டும் சைபர் கிரைம் பிரிவில் 1,234 புகார்கள் வந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். காவல்நிலையங்களில் பெறப்படும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில், சைபர் கிரைம் தொடர்பாக, 1,234 புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சைபர் கிரைமில் மோசடி, ஏமாற்றுதல் என புகார்கள் அதிகமாகி வரு கிறது. நடப்பாண்டில் சைபர் கிரைமில், 1,234 புகார்கள் பெறப்பட்டு விசாரிக்கப்படுகிறது. அதில், 5 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக புகார் தரப்பட்டுள்ளது 4.61 கோடி வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பெறப்படும் புகார் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தர குவிந்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் சுமார், 1700 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக் கப்பட்டது. எஸ்.பி., அலுவலகத்தில்அளிக்கப்படும் புகார் மனுக்கள், 5 நாட்களில் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 10 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குறைதீர்ப்பு முகாம்களில் பெறப்படும் புகார்களுக்கு, விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அளவில் ரவுடிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 343 ரவுடிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 285 ரவுடிகள் எந்த குற்றமும் செய்யமாட்டோம்" என பிணை பத்திரம் எழுதி தந்துள்ளனர். 48 ரவுடிகள் சிறையில் உள்ளனர். ஜாமீனில் வந்துள்ள ரவுடிகளை கண்காணித்து வருகிறோம்.

கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதில், கோவை மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விசாகப்பட்டணம், பெங்களூரு ஆகிய இரு இடங்களில் இருந்து, அதிகளவு கஞ்சா கடத்தி வருகின்றனர்.

மாவட்ட அளவில், 145 கல்லுாரிகளில் வருகிற, 8ம் தேதி முதல், போதை பொருட்கள் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள, 11 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணி முறையாக நடக்கிறது. இ - பீட் மூலமாக ரோந்து பணிகள் முறைப்படுத்தப்பட்டு, விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...