மே தினம் - கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி

கோவையில் சிந்தாமணி முதல் காமராஜ்புரம் வரை இடதுசாரி அமைப்பைச் சார்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள் மே தினத்தை முன்னிட்டு பேரணியாக சென்றனர்.



கோவை: கோவையில் மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது.

உலகம் முழுவதும் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடுகின்றனர். தொழிலாளர்களின் உரிமைக்காக போராடிய தியாகிகளின் நினைவுகளை போற்றும் விதமாக இன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கோவையில் சிந்தாமணி முதல் காமராஜ்புரம் வரை இடதுசாரி அமைப்பைச் சார்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள் பேரணி நடத்தினர்.



இதில் எட்டு மணி நேர வேலைக்காக போராடிய தொழிலாளர்கள், தொழிலாளர்களின் உரிமைக்காக போராடிய தியாகங்கள் உள்ளிட்டவற்றை போற்றி முழங்கினர்.



தொழிலாளர்களின் உரிமை ஒருபோதும் பறிபோகக் கூடாது என்றும் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் தொழிலாளர்களின் விரோத போக்கை கடைபிடிக்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டனர்.



தொழிலாளர்களின் நலம் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.



இந்தப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று பேரணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...