ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்றால் அதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் - கோவையில் நடிகர் பிரபு பேச்சு!


மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில், இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்ற போது அரசு அதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நடிகர் பிரபு கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நடிகர் பிரபு  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய  அரசு கூறிவருகிறது. அப்படி பாதிப்பு இல்லை என்ற நிலையில் அறிவியல் ஆய்வாளர்களை வைத்து அவர்களுக்கு திட்டம் குறித்து முழுமையாக விளக்கமளிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்ற நிலை இருப்பின் அதை அரசு கவனத்திற்க்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நடிகர்கள் ஆதரவு தருவோம்.

நடிகை பாவனா தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவை வெளியில் வந்து சொன்னது வரவேற்கத்தக்கது. தொடர்ந்து பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்து வருகிறது. மக்கள் தான் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ஆண்மகன் தான் பெண்களுக்கு பாதுகாப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...