துரை வைகோவுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை..! - மதிமுக அவைத்தலைவர் துரைசாமி அதிரடி

மதிமுகவை திமுகவுடன் இணைப்பது குறித்து வைகோவுக்கு எழுதிய கடிதம் தொடர்பாக ஒரு சில தினங்களில் பதில் வராவிட்டால், அடுத்த நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என மதிமுக அவைத்தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.



திருப்பூர்: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எதை முன்னிருத்தி துவங்கியதோ அதன் நிலை மறந்து, சந்தர்ப்பவாத அரசியல் நடைபெறுவதாகவும், சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர்கள் அல்ல.

கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கழகத்தை தாய் கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது. என மதிமுக அவைத்தலைவர் துரைசாமி வைகோவிற்கு அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



இச்சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், திருப்பூரில் உள்ள மதிமுக அவை தலைவர் துரைசாமி இல்லத்தில் அவர் ஆதரவாளர்கள் நேரில் சந்தித்தனர்.



அப்போது, துரைசாமி எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.



அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த துரைசாமி, திமுகவிலிருந்து மதிமுக பிரிந்து வந்தபோது மதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ள வைகோ, வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்ததாகவும், அவரது பேச்சை நம்பி 30 ஆண்டுகளுக்கு மேலாக மதிமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள்.

தற்போது புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் உட்கட்சி தேர்தலில் துரை வைகோவிற்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் துரை வைகோ சிலரின் தூண்டுதலின் பெயரில் அவைத்தலைவர் துரைசாமி இது போன்று கருத்து தெரிவித்து வருவதாகக் கூறியது தொடர்பான கேள்விக்கு, துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என்று பதிலளித்த துரைசாமி, அவரை நான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றார்.

மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோவிற்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், அவரின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் அவரின் கருத்துக்குதான் பதில் சொல்வேன் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.‌

தொடர்ந்து ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் துரைசாமி, இன்னும் ஒரு சில தினங்களில் வைகோவிடமிருந்து பதில் வரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...