கோவையில் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் - ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை கோரிக்கை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சியரிடம் அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், இணை இயக்குநர் வேளாண்மை முத்துலட்சுமி,தோட்டக்கலை துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், நிலத்தடி நீர் உயர்த்திட நடவடிக்கை, பாலம் கட்டுதல், சாலைகள் சரி செய்தல், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.



தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக பயிர் பாதுகாப்புத்துறை சார்பில் தென்னை வாடல் நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்கமாகவும் மற்றும் வனவியல் துறை சார்பில் காட்டு பன்றியினால் ஏற்படும் வேளாண் விளைபொருள் சேதத்தை தடுக்கும் முறைகளும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் தென்னை வாடல் நோய் சம்பந்தமாகவும் வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டுதல் சம்பந்தமாகவும், கொப்பரை கொள்முதல் சம்பந்தமாகவும், கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவித்தனர்.

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றவும், மேற்கு சித்திரை சாவடி பாசன மதகுகளை சரி செய்யவும், நொய்யல் ஆற்றில் கழிவு மற்றும் மாசு கலப்பதை தடுக்கவும். கொப்பரை கொள்முதல் விலையை அதிகப்படுத்தவும், கனிமவள கடத்தலை தடுக்கவும். குளப்பத்துகுளம் பாசன சபை அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் மலர், காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்கு தனி மார்க்கெட் அமைத்து தரவும், அங்கக உர மேலாண்மையை மேம்படுத்தவும், வாழை பயிருக்கு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்யவும் வழிவகை செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள்கோரிக்கை வைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...