கோட்டை மாரியம்மன் கோவில் முடி காணிக்கை டெண்டரை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு - பாஜக ஆர்ப்பாட்டம்!

மடத்துக்குளம் அருகிலுள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முடி காணிக்கை டெண்டரை தனியாருக்கு விடும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் பிரபு தலைமையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மடத்துக்குளம் அருகிலுள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முடி காணிக்கை டெண்டரை தனியாருக்கு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மடத்துக்குளம் அருகே கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலில் முடி காணிக்கையை தனியாருக்கு டெண்டர் விடும் கொழுமம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய தலைவர் பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், மாவட்டச் செயலாளர் தெய்வக்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அன்பு, மாவட்ட ஐடி பிரிவு தலைவர் குணசேகர் , உடுமலை வடக்கு ஒன்றிய தலைவர் நாகமாணிக்கம், உடுமலை மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், உடுமலை மேற்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன், மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் மணியன் உள்ளிட்ட மாநில மாவட்ட மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...