உடுமலையில் பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு முகாம் - தோட்டக் கலைத்துறை ஏற்பாடு!

உடுமலை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில், பயனாளிகள் தேர்வுக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு தோட்டக் கலை துறை சார்பில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில், பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

உடுமலை வட்டாரத்தில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களுக்கு, சிறப்பு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அவ்வகையில், ரெட்டிபாளையம் கிராமத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.



வட்டார தோட்டக் கலைத்துறை இயக்குனர் மோகன ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் தோட்ட கலைதுறை சார்பில், செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், அதற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், பயனாளிகள் தேர்வுக்காக விளைநிலங்களில், அதிகாரிகள் நேரடி கள ஆய்வு செய்தனர். அப்பகுதியில் தென்னை சாகுபடியில் காணப்படும் நோய் மற்றும் பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் முகாமில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ரெட்டிபாளையம் கிராம விவசாயிகள் மற்றும் தோட்ட கலைத்துறை உதவி அலுவலர் பிரியங்கா உட்பட அலுவலர்கள் பலரும் இந்த முகாமில் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...