கோவை பாலக்காடு சாலையில் 2 லாரிகள் மோதி விபத்து - கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தால் பரபரப்பு

கோவை - கேரளா எல்லையான வாளையார் அருகே டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில், டேங்கர் லாரியில் இருந்த கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வாளையார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: வாளையார் அருகே லாரிகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து, கோவையில் உள்ள சோடா தயாரிக்கும் நிறுவனத்திற்கு டேங்கர் லாரி மூலம் கார்பன்-டை ஆக்ஸைடு ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்று, தமிழக - கேரளா எல்லையான வாளையார் வட்டப்பாரா அருகே வந்தபோது, கோவைக்கு காய்கறி லோடு ஏற்ற வந்த மற்றொரு லாரி, டேங்கர் லாரியின் பின்புறம் மோதியது.



இதில் டேங்கர் லாரியின் வால்வில் உடைப்பு ஏற்பட்டு, உள்ளே இருந்த கார்பன்-டை ஆக்ஸைடு பயங்கர சத்தத்துடன் வெளியேறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வாளையார் போலீசார் உடனடியாக பாலக்காடு - கோவை நெடுஞ்சாலையில் போக்குவரத்தை முழுமையாக நிறுத்தினர்.

பின்னர் அங்கு வந்த கஞ்சிக்கோடு தீயணைப்புத் துறையினர் கார்பன்-டை ஆக்ஸைடு வெளியேறுவதை தடுக்க தீவிரமாக போராடினர். சுமார் 2 மணி நேரம் போராடி டேங்கர் லாரியில் உடைப்பு ஏற்பட்ட வால்வை தீயணைப்புத் துறையினர் சரி செய்தனர்.

கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் அதிக சத்தத்துடன் கார்பன்-டைஆக்ஸைடு வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வாளையார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...