உடுமலை நகர மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கூட்டம்

உடுமலை நகராட்சி தலைவராக மத்தீன் உள்ளார். இவர் நகராட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், திமுக நகரச் செயலாளர் வேலுசாமி தலைமையில் திமுக கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: உடுமலை நகர மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள்கட்சி அலுவலகத்தில் கூட்டம்நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க-26, கூட்டணி கட்சி-3 மற்றும் அ.தி.மு.க-3 என மொத்தம் 32 கவுன்சிலர்கள் உள்ளனர். ஒரு இடம் காலியாக உள்ளது. தலைவர் தேர்தலின் போது, தி.மு.க தலைமை அறிவித்த ஜெயக்குமாருக்கு எதிராக, அப்போதைய நகரச்செயலாளர் மத்தீன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் நகரசெயலாளர் பொறுப்பிலிருந்து திமுக தலைமை அவரை நீக்கியது.

இந்நிலையில் 87 தீர்மானங்களுடன் நகராட்சி கூட்டத்திற்கு தலைவர் மத்தீன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தலைவர் மீதான அதிருப்தி காரணமாக தி.மு.க நகரச்செயலாளர் வேலுசாமி தலைமையில், கட்சி அலுவலகத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க., கவுன்சிலர்கள் கூறுகையில், 'தினசரி சந்தை குத்தகை 1.10 கோடி ரூபாயாகும். குத்தகை நீடித்து அதே நபருக்கு, பாதியாக குறைத்து, லட்சம் 55 ரூபாய்க்கு வழங்க தீர்மானம் உள்ளிட்ட நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்த, பெரும் தொகை கைமாறியுள்ளது.

இதுதவிர நிர்வாகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடக்கிறது. எனவே, தலைவர், தீர்மானங்களுக்கு எதிராக தனியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கட்சித்தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளோம்,” என்றனர்.

உடுமலை திமுக நகர மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் தனியாக கூட்டம் நடத்தியதால் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...