பல்லடம் அருகே 16 ஆண்டுக்குப்பின் நடந்த கோயில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம்புதூர் கிராமத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மாகாளியம்மன் மற்றும் விநாயகர் கோயில்களுக்கான கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில், சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம் புதூர் கிராமத்தில் அருள்மிகு மாகாளியம்மன் மற்றும் விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இரண்டு கோவில்களும் புரனமைப்பு செய்யப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

கடந்த 24 ஆம் தேதி தீர்த்த கலசம் மற்றும் முளைப்பாரி எடுத்து விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேகப் பெருவிழா தொடங்கியது.



அம்பிகைக்கு முதற்கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, யாகசாலையில் இருந்து கோபுர கலசத்திற்கு தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டு, சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.



மாகாளியம்மன் மற்றும் விநாயகர் திருக்கோவில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பின், மூலவர் சிலைகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...