பாசிச சக்தியால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நந்தினிக்கு உரிய நீதி வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூரைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி நந்தினி பாலியல் வன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய நீதி வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நந்தினியை ஏமாற்றி தனது சமூக விரோத கூட்டாளிகளோடு பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு கொடூரமாக கொலை செய்த இந்து பாசிச சக்திகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். வழக்கு விசாரணை வரும் வரை குற்றவாளிகளை பிணையில் வெளியிடக் கூடாது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜசேகரை வழக்கில் இணைத்து கைது செய்ய வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை கடுமையாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்ட தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் மாநிலக் குழு உறுப்பினர் தி.செ.கோபால், தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கோதவாடி ராசன், அமைப்புச் செயலாளர் தாமரை வீரன், மாநகர தலைவர் புதூர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ஆ.நாகராசன் கண்டன உரையாற்றினார். 

தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், மாவட்டச் செயலாளர் முருகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...