கோவையில் இருசக்கர வாகன விபத்து - இளைஞர் உயிரிழப்பு

கோவை சத்தி சாலையில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில் நாகையைச் சேர்ந்த நாகேஸ்வரன் எனும் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: நாகப்பட்டினம் மாவட்டம் கமலா வீதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் நாகேஸ்வரன் (வயது32). இவர் கோவை கோவில்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு நாகேஸ்வரன், தனது இருசக்கர வாகனத்தில் சத்தியமங்கலம் சாலை கோவில்பாளையத்திலிருந்து குரும்பபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, குரும்பபாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் சாலை ஓரத்தில் இருந்த வேப்பமரத்தின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட நாகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த கோவில்பாளையம் போலீசார், நாகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...