பென்சில் முனையில் முகக்கவசம் - விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை ஆட்டோ ஓட்டுனர்!

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்ற ஆட்டோ ஓட்டுனர், பென்சில் முனையில் முகக்கவசம் மற்றும் Wear Mask என்ற வாசகத்தை செதுக்கி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.


கோவை: கோவை காந்திபார்க் பகுதியில் பென்சில் முனையில் முகக்கவசம் போன்ற சிற்பம் செதுக்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ். ஆட்டோ ஓட்டுனரான இவர், கோவையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், பென்சில் முனையில், முகக்கவசம் வடிவத்தையும் அதன் கீழ் WEAR MASK என்ற வார்த்தைகளையும் செதுக்கியுள்ளார்.



முகக்கவசம் அணிவது கட்டாயம் என அவரது ஆட்டோவில் ஏறும் அனைத்து பயணிகளுக்கும் வலியுறுத்தியும் வருகிறார். மேலும் முகக்கவசம் இல்லாமல் அவரது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு முகக்கவசங்களையும் வழங்கி வருகிறார்.



இவர் இதேபோன்று பென்சில் முனையில் விலங்குகள், மனிதர்கள், பெயர்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை செதுக்கியுள்ளார். மேலும் அவரது ஆட்டோவில் வைக்கப்பட்டுள்ள I LOVE AUTO என்ற மினி கிராஃப்ட் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...