கோவை மாநகர பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டி - மாநகர காவல் ஆணையர் துவங்கி வைத்தார்!

தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் காவலர்களாக பணியில் சேர்ந்து, 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கோவை மாநகர காவல்துறை சார்பில் பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டிகளை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது.

காவல்துறையில் பெண்கள் காவலர்களாக சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி கோவை மாநகரில் பெண் காவலர்களுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் படி பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மாநகர பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது.



இதில் ஆய்வாளர் தெய்வமணி தலைமையில் Thunder Girls என்ற அணியும், ஆய்வாளர் தெளலத் நிஷா தலைமையில் Fire என்ற அணியும் மோதின. இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த போட்டிகள் ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்றது.



இதில் மாநகர காவல் தலைமை அலுவலக ஆணையாளர் சுகாசினி உட்பட பல்வேறு காவலர்கள் பங்கேற்று விளையாட்டை கண்டுகளித்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...