கோவையில் தனியார் கல்லூரியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்வழித்தடத்தை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், கரட்டுமேடு பகுதியை அடுத்த வழியாம்பாளையம் பகுதியில் எஸ்.என்.எஸ் என்ற பெயரில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியின் வளாகத்தையொட்டி விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை கொண்டு செல்லும் நீர்வழித் தடம் உள்ளது. மழைக் காலங்களில் ஊருக்குள் இருந்து மழை நீரானது இந்த ஓடை வழியாக விவசாய நிலத்துக்குள் பாய்ந்து வரும். இந்த நீரை நம்பி அந்த பகுதியில் வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.



ஆனால், தற்போது இந்த ஓடையை தனியார் கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதுடன், மற்றொரு பகுதி வழியாக கழிவு நீரையும் வெளியேற்றி வருகிறது. மேலும், கல்லூரியின் வெளிப்பகுதியில் நீர் வழித் தடத்தை மூடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து எஸ்என்எஸ் கல்லூரி நிர்வாகத்தின் இத்தகைய செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், நீர் வழித்தடத்தை மாவட்ட நிர்வாகம் மீட்டுத்தரக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த ஓடை தடுக்கப்பட்டால் மழைக் காலத்தில் நீர் வெளியேறாமல் குடியுருப்பு பகுதிக்குள் தண்ணீர்புகும் நிலை ஏற்படும் எனவும், இதனால் இதனை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...