தாராபுரத்தில் ரம்ஜான் கொண்டாட்டம் - இஸ்லாமியர்கள் கூட்டுத்தொழுகை!

சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையையொட்டி, தாராபுரத்தில் இறைச்சி மஸ்தான் இதுகா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.


திருப்பூர்: நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

நேற்று பிறை தெரிந்ததை முன்னிட்டு இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சுங்கம் அருகே அமைந்துள்ள இறைச்சி மஸ்தான் இதுகா மைதான திடலில் தொழுகை நடைபெற்றது.



பெரிய பள்ளி தலைமை அஜரத் மீரான் கனி மிஸ்பாஹி தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் சிறுவர் சிறுமிகள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உலக மக்கள் அமைதிக்காகவும் நாட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும் சிறப்பு தொழுகை ஈடுபட்டனர்.



கடந்த 30 நாட்கள் நோன்பிருந்து இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.



இதைத் தொடர்ந்து, ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...