கோவை அருகே பக்தர்களின் வாகனத்தை வழிமறித்து நின்ற காட்டுயானை கூட்டம் - வைரலாகும் வீடியோ!

கோவை வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஜீப்பில் சிலர் சென்றபோது, வழியில் இரண்டு குட்டியானைகளுடன் வந்த 8-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையில் வாகனங்களை வழிமறித்தவாறு நின்றது. இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் ஆங்கங்கே நின்றன. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.



கோவை: கோவை வெள்ளியங்கிரி மலை சிவன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இரவு நேரங்களிலும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவர். சில சமயங்களில் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் இரவு நேரங்களில் மலையேற கூடாது என தெரிவித்தால் இரவு முழுவதும் மலை அடிவாரத்திலேயே தங்கி விட்டு அதிகாலையில் மலையேறுவர்.

இந்நிலையில் நேற்று இரவு வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஜீப்பில் சிலர் சென்று கொண்டிருக்கையில், வழியில் இரண்டு குட்டியானைகளுடன் வந்த 8-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையில் வாகனங்களை வழிமறித்தவாறு நின்றது. இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் ஆங்கங்கே நின்றன.

வாகன ஓட்டிகளும் யானைகளுக்கு தொந்தரவு அளிக்காமல் இருக்க ஒலிபெருக்கிகளை எழுப்பாமல் அமைதியாக இருந்தனர்.



சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானைகள் சாலையிலேயே நின்றுள்ளன. இதனையடுத்து வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதனிடையே ஜீப்பில் இருந்த ஒருவர் அவரது செல்போனில் யானைகளை வழிமறித்து நின்றதை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

இரவு நேரங்களிலும் பக்தர்கள் வெள்ளிங்கிரி கோவிலுக்கு செல்வதால் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க, வனத்துறையினர் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...