முதுமலை சாலையோரங்களில் வனவிலங்குகள் உலா - பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் வன விலங்குகள் உணவுதேடி சாலை ஓரத்திற்கு வருவது அதிகரித்து உள்ளது. அவற்றை, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. புலிகள், காட்டு யானைகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் இந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன.

தற்போது கோடை காலம் என்பதால், வனவிலங்களுக்கு குடிநீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குடிநீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் இடம் பெற தொடங்கியுள்ளன.



குறிப்பாக காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் காலை மற்றும் மாலை நேரங்களில் உணவு தேடி மசினகுடி - தெப்பக்காடு நெடுஞ்சாலைக்கு வரத் தொடங்கியுள்ளன.



சாலை ஓரத்தில் உள்ள புற்களை மேயும் இந்த வனவிலங்குகளை, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.



குறிப்பாக, சாலை ஓரத்தில் சுற்றி தெரியும் ஆண் மயில்கள், அடிக்கடி பெண் மயில்களை கவரும் வகையில் தோகை விரித்தாடுவதை ஏராளமானோர் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...