பாம்பு கடித்து சிகிச்சை பெற்றுவந்த பால் விற்பனையாளர் - கோவை அரசு மருத்துவமனையில் பலி

கோவை அரசு மருத்துவமனையில் பாம்புக் கடிக்காக சிகிச்சை பெற்றுவந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த பால் விற்பனையாளர் விஜயகுமார் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ராசக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது37). பால் விற்பனையாளர். இவர் கடந்த 8 ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப்புல் வெட்டியுள்ளார். அப்போது, அங்கு பதுங்யிகிருந்த விஷப்பாம்பு ஒன்று அவரது கையை கடித்துள்ளது.

இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து, மருந்துவர்கள் பரிந்துரையை ஏற்று, கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயகுமார் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...