பல்லடம் பிரத்தியங்கரா தேவி கோயிலில் யாகக் குண்டம் - கூடைகூடையாய் வர மிளகாயைக் கொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகிலுள்ள உக்ர பிரத்தியங்கரா தேவி திருக்கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற நிகுபல யாக குண்ட நிகழ்ச்சியில் பக்தர்கள் கூடை கூடையாக வரமிளகாய்களைக் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


திருப்பூர்: பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் எழுந்தருளியுள்ள உண்ணாமலை அம்பிகை சமேத அண்ணாமலையார் திருக்கோவில் மற்றும் உக்கிர பிரத்தியங்கரா தேவி திருக்கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு நிகுபல யாக பூஜை நடைபெற்றது.



இந்த யாகத்தில் காய்ந்த மிளகாய், பலகாரங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை பக்தர்கள் சீர்வரிசையாக கொண்டு வந்து, கூடை கூடையாக யாக குண்டத்தில் கொட்டி வழிபாடு செய்தனர்.



இந்த யாகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களிடம் இருந்து, தீய சக்திகள், பில்லி -சூனியங்கள் விலகும் எனவும், தொழில் வளர்ச்சி, குழந்தையின்மை, திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. பக்தர்கள் கொண்டு வந்த மிளகாய், காய்கறிகள் ஆகியவற்றை பிரத்தியங்கிரா தேவிக்கு படைத்து, பின்னர் யாக குண்டத்தில் கொட்டினர்.



பொள்ளாச்சி, நல்லூர், சோமனூர், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், இந்த யாகபூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...