திருப்பூரில் மருத்துவம் பயிலாமல் சிகிச்சையளித்து வந்த போலி மருத்துவர் கைது!

திருப்பூர் அடுத்த கரட்டாங்காடு பகுதியில் மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த அண்ணாதுரை என்பவரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் அருகே முறையாக மருத்துவம் பயிலாமல் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் அடுத்த கரட்டாங்காடு பகுதியில் முறையான அனுமதி பெறாமல் மருத்துவமனை செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்திற்கு புகார்கள் வந்துள்ளன.



இதனை தொடர்ந்து புகார்கள் தொடர்பாக தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் கனகராணி தலைமையிலான அதிகாரிகள் கரட்டாங்காடு பகுதியில் செயல்பட்டு வந்த (கிளினிக்) மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.



அப்போது கடந்த 2019ஆம் ஆண்டு வேறு ஒருவர் பெயரில் பெற்ற உரிமத்தை கொண்டு அண்ணாதுரை என்பவர் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. மேலும் ஆயுர்வேத மருத்துவம் படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து உரிய அனுமதியின்றி செயல்பட்ட மருத்துவமனைக்கு கடந்த 13ம் தேதி அதிகாரிகள் சீல் வைத்தனர்.



இதனை தொடர்ந்து மருத்துவம் பார்த்து வந்த அண்ணாதுரையிடம் மாவட்ட சுகாதார பணிகள் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆயுர்வேதம் பயிலாமல் மருத்துவம் பார்த்ததும் அவர் வைத்திருந்த சான்றுகள் அனைத்தும் தமிழ்நாடு சித்த மருத்துவ கழகத்தில் பதிவு செய்ய இயலாது என தெரியவந்தது.

மேலும் சுகாதார துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலி மருத்துவர் அண்ணாதுரையை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

மருத்துவம் பயிலாமல் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறிய அளவில் நடத்தப்படும் மருத்துவமனைகளை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...