திருப்பூரில் மருத்துவம் பயிலாமல் சிகிச்சையளித்து வந்த போலி மருத்துவர் கைது!

திருப்பூர் அடுத்த கரட்டாங்காடு பகுதியில் மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த அண்ணாதுரை என்பவரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் அருகே முறையாக மருத்துவம் பயிலாமல் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் அடுத்த கரட்டாங்காடு பகுதியில் முறையான அனுமதி பெறாமல் மருத்துவமனை செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்திற்கு புகார்கள் வந்துள்ளன.



இதனை தொடர்ந்து புகார்கள் தொடர்பாக தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் கனகராணி தலைமையிலான அதிகாரிகள் கரட்டாங்காடு பகுதியில் செயல்பட்டு வந்த (கிளினிக்) மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.



அப்போது கடந்த 2019ஆம் ஆண்டு வேறு ஒருவர் பெயரில் பெற்ற உரிமத்தை கொண்டு அண்ணாதுரை என்பவர் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. மேலும் ஆயுர்வேத மருத்துவம் படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து உரிய அனுமதியின்றி செயல்பட்ட மருத்துவமனைக்கு கடந்த 13ம் தேதி அதிகாரிகள் சீல் வைத்தனர்.



இதனை தொடர்ந்து மருத்துவம் பார்த்து வந்த அண்ணாதுரையிடம் மாவட்ட சுகாதார பணிகள் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆயுர்வேதம் பயிலாமல் மருத்துவம் பார்த்ததும் அவர் வைத்திருந்த சான்றுகள் அனைத்தும் தமிழ்நாடு சித்த மருத்துவ கழகத்தில் பதிவு செய்ய இயலாது என தெரியவந்தது.

மேலும் சுகாதார துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலி மருத்துவர் அண்ணாதுரையை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

மருத்துவம் பயிலாமல் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறிய அளவில் நடத்தப்படும் மருத்துவமனைகளை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...