காந்திபுரம் மேம்பாலத்தில் கவிழ்ந்த தண்ணீர் லாரியால் பரபரப்பு!

கோவை காந்திபுரம் உயர்மட்ட மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கிய தண்ணி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்ததால் லாரியில் இருந்த தண்ணீர் முழுவதும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.


கோவை: காந்திபுரம் உயர்மட்ட மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கிய தண்ணி லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



கோவை காந்திபுரம் உயர் மட்டும் மேம்பாலம் அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலையை இணைக்கும் மேம்பாலமாக உள்ளது இந்த மேம்பாலத்தில் சக்தி சாலையிலிருந்து அவிநாசி சாலையை நோக்கி வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி இறங்கும்போது பிரேக் பிடிக்காத காரணத்தினால் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்து விழுந்தது.



லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் கார்த்தி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். லாரியில் இருந்த அனைத்து தண்ணீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.



சாலையில் இருந்து கீழே செல்லக்கூடிய வாகனங்கள் திடீரென லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சரி செய்தனர்.



லாரியின் உரிமையாளர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டார். அவரிடம் கேட்டபோது இன்று தான் புதிதாக ஓட்டுநர் கார்த்தி பணியில் சேர்ந்தார் என்றும், இரண்டு முறை கணபதி சாலையிலிருந்து பார்கேட் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வந்து ஊற்றிவிட்டு மூன்றாவது முறையாக தண்ணீர் கொண்டு வரும்போது வண்டி நிலை தடுமாறி கவிழ்ந்து விட்டதாகவும், ஓட்டுநர் கார்த்தியை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அனுப்பி விட்டதாக கூறினார்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...