கொரோனா பரவல் எதிரொலி - கோவை நீதிமன்றங்களில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்!

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் கட்டாய முகக்கவசம் அணியும் உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.


கோவை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் கடந்த ஏப்.,10 முதல், சில வழக்குகள் நேரடியாகவும், சில வழக்குகள், இணையதளம் மூலமும் விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த வசதியையும், வழக்குகளை 'இ- பைலிங்' முறையில் தாக்கல் செய்யும் வசதியையும், வழக்கறிஞர்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக, தமிழகம், புதுச்சேரியில் உள்ள உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில், முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருநதார்.



அதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று முதல் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர், முகக்கவசம் அணிவது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை அடிக்கடி கழுவுவது ஆகிய நடவடிக்கைகள் கட்டாய மாக்கப்படுகின்றன.



வழக்கு பட்டியலில் இடம்பெறாத நிலையில், வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். நீதிமன்ற அறை, நீதிபதிகள் அறை, நீதிமன்ற வளாகங்களில், கிருமி நாசினி தெளிக்க வேண்டும். நீதிமன்ற அறை நுழைவு வாயில், முக்கிய இடங்களில் 'சானிடைசர்' வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...