காட்டுத்தீயை தடுக்க மாவட்டந்தோறும் குழுக்கள் - வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு தகவல்!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு, கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் காட்டுத்தீ பரவாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் 4 முதல் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், குழுவிலும் 20 முதல் 25 இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.



கோவை: கோடைகாலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை தடுப்பதற்காக மாவட்டம் தோறும் 4 முதல் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக தமிழக வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு பேசியதாவது, கோவை ஆலாந்துறை அருகே கடந்த ஐந்து நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் காட்டு தீ பரவாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் காட்டு தீ தடுப்பு நடவடிக்கையாக நான்கு முதல் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 20 முதல் 25 இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...