கருமலை பஜாரில் நிழற்குடை மற்றும் கழிப்பிடம் கட்ட பூமி பூஜை - நகர மன்ற தலைவர் பங்கேற்பு

வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதியில் பயணிகள் நிழற்குடை சிதிலமடைந்து கீழே விழுந்த நிலையில், ரூ.7 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணி மற்றும் ரூ.19 லட்சம் மதிப்பில் புதிதாக பொது கழிப்பிடம் கட்டும் பணிக்கான பூமிபூஜையில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி பங்கேற்றார்.


கோவை: வால்பாறை அருகேயுள்ள கருமலை எஸ்டேட் பஜாரில் பயணிகள் நிழற்குடை மற்றும் கழிப்பிடம் ஆகியவற்றை புதுப்பிக்கும் பணிக்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் பஜார் பகுதியில் ஏற்கனவே இருந்த பயணிகள் நிழற்குடை பழுதடைந்து, கட்டிடம் உடைந்து கீழே விழுந்து பயணிகள் நிழற்குடைக்குள் அமர முடியாமல் இருந்து வந்தது.



இந்த நிலையில் அப்பகுதி மக்களின் நலன் கருதி சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில் பயணியர் நிழற்குடையை புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜையும், அதன் அருகில் நீண்ட காலமாக மக்கள் பயன்படுத்த முடியாமல் சிதிலமடைந்த பொது கழிப்பிடமும் சுமார் 19 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ளதற்கான பூமி பூஜை நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் செல்வம், 12வது வார்டு நகர மன்ற உறுப்பினர் அன்பரசன், நகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...